Friday, March 20, 2026

பெட்ரோல் விலை திடீர் உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.. ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா?

பெட்ரோல் விலை திடீர் உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.. ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா?


 கடந்த பிப்ரவரி மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி விலை சராசரியாக பேரலுக்கு 69 டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6,500ஆக இருந்த நிலையில், தற்போது கச்சா எண்ணெய் இறக்குமதி விலை பேரலுக்கு 140 டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 14,000 ரூபாயாக அதிகரித்திருந்தது.


அதன்படி கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 110 டாலரை கடந்தும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யவில்லை என்றால், எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு சுமார் 7 ரூபாய் வரை இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.


இதனால் தற்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 140 டாலரை கடந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்களின் நிதிநிலை கடுமையான பாதிப்பை சந்திப்பதாக தகவல் வெளியானது.


இந்நிலையில் பிரீமியம் பெட்ரோல் விலையை இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் உயர்த்தியுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.99.87லிருந்து ரூ.101.89 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.09 முதல் ரூ.2.35 வரை அதிகரித்துள்ளது.


Monday, March 2, 2026

ஏலக்காய் தோட்டத் தொழிலாளி இப்போது உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக உள்ளார். அதுவும் எம்.எஸ்.சி, எம்.இ.டி, எம்ஃபில் ஆகியவற்றில் முதல் ரேங்க். The Real Kerala Story

ஏலக்காய் தோட்டத் தொழிலாளி இப்போது உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக உள்ளார். அதுவும் எம்.எஸ்.சி, எம்.இ.டி, எம்ஃபில் ஆகியவற்றில் முதல் ரேங்க். The Real Kerala Story



 இடுக்கியின் பனி மூடிய ஏலக்காய்த் தோட்டங்களில் வெயிலிலும் மழையிலும் உழைத்த அந்தக் கரங்கள் இன்று அறிவு உலகில் வரலாற்றைப் படைக்கின்றன ✍️. காஞ்சியாரின் பேழுங்கண்டத்தைச் சேர்ந்த செல்வமேரியின் வாழ்க்கை, புன்னகையுடன் தங்கள் கனவுகளை வெல்ல விரும்பும் எந்தவொரு சாதாரண மனிதனுக்கும் ஒரு சிறந்த பாடமாகும் 🏔️.


தோட்டத் தொழிலாளர்களாக இருந்த பெற்றோரின் மகளாகப் பிறந்த செல்வமேரியின் அறிவுப் பயணம் குமிலி அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது 🏫. படிப்பில் சிறந்தவராக இருந்தபோதிலும், குடும்பத்தின் நிதி சிக்கல்கள் பெரும்பாலும் ஒரு தடையாக இருந்தன. இருப்பினும், அவர் கைவிடத் தயாராக இல்லை. நாள் முழுவதும் ஏலக்காய்த் தோட்டத்தில் வேலை செய்து சம்பாதித்த வருமானத்தில் உயர்கல்விக்கான வழியைக் கண்டுபிடித்தார் 🌿.


கட்டப்பனாவில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பும் பின்னர் பி.எட் பட்டமும் பெற்ற செல்வமேரி, படிப்பின் மீதான தீராத ஆர்வத்துடன் தலைநகருக்கு ரயிலில் ஏறினார் 🎓. திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகக் கல்லூரியில் மலையாள எம்.ஃபில் பாடத்தில் முதல் ரேங்க் பெற்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார் 🥇. இவ்வளவு புகழ்பெற்ற சாதனைகள் இருந்தபோதிலும், அவர் தனது வேர்களை மறக்கவில்லை; விடுமுறை நாட்களில் தனது சொந்த ஊருக்குச் சென்று ஏலக்காய்த் தோட்டங்களில் வேலை செய்து, எப்போதும் தனது குடும்பத்தை ஆதரித்தார்.


PSC தேர்வுக்குத் தயாராகும் போது, ​​காஞ்சியார் அரசு LP பள்ளியில் LPSA வேலை கிடைத்த செய்தியை அறிந்த அவர், தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் ✨. வேறு எதையும் யோசிக்காமல், மகிழ்ச்சியுடன், தோட்டத் தொழிலாளி வேடத்தில் பள்ளிக்கு வந்து பொறுப்பேற்றார். அன்று கேரளா முழுவதும் அவரது சேற்று உடைகள், கையில் கத்தி மற்றும் நம்பிக்கையான முகத்துடன் அவளை ஆச்சரியத்துடன் பார்த்திருக்க வேண்டும் 🪵🔥.


ஆனால் செல்வமேரி ஒரு LP பள்ளி ஆசிரியராக ஆனதோடு மட்டும் தனது பயணத்தை முடித்துக் கொள்ளவில்லை. வேலை செய்யும் போது, ​​அவர் தனது படிப்பைத் தொடர்ந்தார், K-TET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார், கடின உழைப்பின் மூலம் உயர்நிலைப் பள்ளிப் பிரிவுக்கு (HST) பதவி உயர்வு பெற்றார் ✌️. அந்தப் பெரிய கனவு நனவாகியதன் மூலம், உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையில் மற்றொரு பெரிய படியை எடுத்து வைத்துள்ளார் 🌟.


வரம்புகள் அல்ல, நோக்கத்துடன் கடின உழைப்புதான் வெற்றிக்கு அடிப்படை என்பதை செல்வமேரி நிரூபித்துள்ளார் 💯. இன்று, வகுப்பறைகளில் குழந்தைகளுக்கு எழுத்துக்கள் கற்பிக்கும் போதும், இந்த ஆசிரியை தான் வளர்ந்த ஏலக்காய்த் தோட்டங்களையும், தனது உழைப்பின் வியர்வையையும் மிகுந்த பெருமையுடன் நினைவு கூர்கிறார் 🎓✨.

Thursday, February 26, 2026

பணி நியமன முறைகேடு.. அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி மனு!

பணி நியமன முறைகேடு.. அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி மனு!

 


நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டும் வழக்குப் பதிவு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக எம்.பி ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்கள் நியமனங்களுக்கு 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதால், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யும்படி அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, அமலாக்கத் துறை அனுப்பிய தகவல்களில் ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அதன் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

Monday, February 23, 2026

“ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளில் சரி பாதி பெண்களுக்கு வழங்கப்படும்” – தவெக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய்

“ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளில் சரி பாதி பெண்களுக்கு வழங்கப்படும்” – தவெக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய்

 


வேலூரில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “அதிகாரிகளில் சரி பாதி பெண்கள்” உள்ளிட்ட தனது தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார்.

வேலூர் மாவட்டம் கொல்லமங்கலம் பகுதியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தனது பாணியில் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி தனது பேச்சை தொடங்கினார்.


அவர் சொன்ன குட்டி ஸ்டோரி, “ஆள் நடமாட்டம் அதிகமுள்ள 4 சாலை சந்திப்பில் ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளை நிற்கிறது. அதன் அருகில் யாரும் போக முடியவில்லை. அந்த காளையை அடக்கினால் தான் அந்த இடம் இயல்புக்கு திரும்பும். அந்த காளையை அடக்க நினைத்த ஒரு சிலர், "எங்களுக்கு இல்லாத அனுபவமா?" என அடக்க முயன்றனர். யாராலும் தொட முடியவில்லை.


ஒரு சின்ன பையன் வருகிறான். அந்த பையனையும் கிண்டல் செய்கிறார்கள். அந்த சிறுவனை ஏளனம் செய்தனர். இன்னொரு புறம் பரிதாபப்பட்டனர். சின்ன பையன் எதையும் கேட்காமல் தில்லாக காளையை நோக்கி சென்றான். அந்த பையன் முன்னால் சென்று மறைத்து வைத்திருந்த புல்லு கட்டை கொடுத்து காளையை அடக்கி கூட்டி வந்தான். அடிபட்டு கிடந்த அனுபவசாலிகள் தலையை தொங்கப் போட்டனர்” என குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், தொடர்ந்து தனது தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார்.

Saturday, February 21, 2026

நாம் தமிழர் கட்சி மாநாடு.. 234 தொகுதிகளிலும் பட்டப்படிப்பு முடித்த வேட்பாளர்கள்.. பட்டியல் தயார்!

நாம் தமிழர் கட்சி மாநாடு.. 234 தொகுதிகளிலும் பட்டப்படிப்பு முடித்த வேட்பாளர்கள்.. பட்டியல் தயார்!



 திருச்சி அருகே ஆலம்பட்டி புதூரில் இன்று மாலை நடைபெற உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநாட்டிற்கான இறுதிகட்ட ஏற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' திருச்சி அருகே ஆலம்பட்டி புதூரில் சீமான் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில், 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் சீமான் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
மாநாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் தனித்தனியாக அமர்வதற்கு இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், வெளிநாட்டில் இருந்து வரக்கூடியவர்களுக்கு என தனித்தனி இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காக குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் வரும் அதிரடி மாற்றம்.. என்ன தெரியுமா?

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் வரும் அதிரடி மாற்றம்.. என்ன தெரியுமா?

 


வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் முறையில் மட்டும் பணம் செலுத்தும் நடைமுறையை கொண்டு வர தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, FASTag இல்லாமல் ரொக்கமாகப் பணம் செலுத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட 2 மடங்கு வசூலிக்கப்படுகிறது. UPI மூலம் செலுத்தினால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட 1.25 மடங்கு வசூலிக்கப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் ரொக்கப் பரிமாற்றமே இருக்காது என்பதால், வாகன ஓட்டிகள் அனைவரும் FASTag அல்லது UPI முறைக்கு மாற வேண்டியது கட்டாயமாகும் என்று கூறப்படுகிறது.

Monday, February 16, 2026

மகா சிவராத்திரி: ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்...

மகா சிவராத்திரி: ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்...

 


மகா சிவராத்திரியையொட்டி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் திரளான பக்தர்கள் புனித நீராடினர். கடற்கரை மணலில் சிவலிங்கம் பிடித்து வழிபட்டனர். பலரும் எள்ளுப் பிண்டம் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வடமாநில பக்தர்கள் மற்றும் அகோரிகள் என ஆயிரக்கணக்கானோர் வந்திருந்ததால், அக்னிதீர்த்த கடற்கரையில் கூட்ட நெரிசல் அதிகரித்தது.


மாசி மகாசிவராத்திரி திருவிழாவையொட்டி இன்று திரளான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் புனித நீராடி கடற்கரை மணலில் சிவலிங்கம் பிடித்து வழிபாடு செய்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மாசி மகா சிவராத்திரி மற்றும் ஆடி திருக்கல்யாண விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 8ஆம் தேதி, ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி சன்னதி எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் மீன லக்னத்தில் சிவச்சாரியார்கள் வேத முழங்க கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.